கோடையில் குழந்தைகளுடன்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்!

இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு?

👭👬👫👭👬👫👭👬👪👭👬👪                     கோடையில் குழந்தைகளுடன்
👪👬👭👭👫👭👬👪👬👭👫👪

                يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»

            

சங்கையான அல்லாஹ்வின் நல்லடியார்களே !.

வாழ்க்கை என்னும் பயணத்தின் மூலம் மனிதன் மறுமையின் வெற்றியை அடைவது மட்டுமே
நோக்கமாக இருப்பினும் அந்த வெற்றியை அடைய மனிதன் உலக வாழ்வில் பல வித கட்டங்களை சந்தித்து கடக்க வேண்டிய நிலையை இறைவன் ஏற்படுத்திவிட்டான் .

அதிலுல்ல ஓர் கட்டம் தான் இணக்கங்கள் - உறவுகள் எனலாம் . கணவன் - மனைவி , தாய் , தந்தை - பிள்ளைகள் , உற்றார் , உறவினர்கள் என்ற குடும்ப உறவுகள் , நட்புறவுகள் , கொடுக்கல் - வாங்கல் மூலம் ஏற்படுகிற வியாபார ரீதியான உறவுகள் என ஓர் கூட்டு வாழ்க்கையை இறைவன் விதியாக்கி விட்டான் .

ஒருவன் அவன் மட்டும் முறையாக வாழ்ந்து (வணக்க வழிபாடுகளோடு) அவனை சார்ந்தவர்களை பொருட்படுத்தவில்லை எனில் அவனும் வெற்றி பெற முடியாது என்பதை நாம் இந்த இறைமறையின் வசனத்தின் மூலம் விளங்கி கொள்ள முடிகிறது .

விசுவாசிகளே ! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் (நரக ) நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் .(66:6).

இந்த வசனத்தின் மூலம் ஒருவன் தன்னையும் , அவனை சார்ந்தவர்களையும் சீரான பாதையில் அழைத்து சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை சிந்தனையில் பதிய வைக்க வேண்டும் .
இந்த வகையில் வாழ்வில் மிக நெருக்கமான,அன்னியோநியாமான , தொடர்பு கொண்ட உறவு என்றால் அது பெற்றோர் , பிள்ளைகளின் உறவுதான். அப்படியிருக்க இந்த பிள்ளைகளுடன் நாம் கொள்கிற அணுகுமுறைகள் தொடர்புகள் - கவனங்கள் பற்றிய சில விஷயங்கள் பார்ப்போம் .
சங்கையானவர்களே ! இந்த மாதத்தில் தான் நம் குழந்தைகள் நம்மோடு நெருங்கியிருபவர்கள் மற்ற மாதங்களில் நம்மோடு இருப்பதில்லை . எனவே இந்த நேரத்தில் நாம் அவர்களை எப்படியெல்லாம் உறுவாக்கலாம் அவர்களை பயன்படுத்தலாம் என்றால் மூன்று விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் .

1. இறையச்சம் - இறை நம்பிக்கை உள்ள குழந்தையாக
2. நல்ல அமல்கள் செய்யும் குழந்தையாக
3. இஸ்லாமிய வழிகாட்டல்தான் (குரான்-சுன்னத் ) உயர்ந்தது வெற்றியானது என்ற உணர்வுள்ள குழந்தையாக .
என இந்த மூன்று விஷயங்களையும் கொண்ட குழந்தைகளாக நம் வாரிசுகளை உருவாக்க இந்த விடுமுறை நாட்களை நாம் பயன்படுத்த வேண்டும் .
  

1.     இறையச்சம் - இறை நம்பிக்கை உள்ள குழந்தையாக :
குழந்தைகளின் சிந்தனையில் ஆழ பதிய வேண்டிய விஷயம் இறையச்சம் , இறை நம்பிக்கை தான் , பச்சை மரத்தில் ஆணி இறங்குவது போல பிஞ்சு உள்ளத்தில் அல்லாஹ்வைப்பற்றி , அவனின் அருட்கொடைகளை , அவனின் ஆற்றல் பற்றிய நம்பிக்கை பதிந்துவிட்டால் எதிர்காலம் செழிப்பாகும் என்பதில் சந்தேகம் கிடையாது .
பாவங்கள் , வழிகேடல்கள் விட்டு தவிர்ந்து , எந்த கஷ்ட - நஷ்டத்தையும் தாங்கி கொள்ளும் வல்லமையை பெறும் கலாச்சாரம் சீரழிந்துள்ள இக்காலத்தில் இறையச்சம் ஊட்டப்பட்ட ஓர் குழந்தையின் எதிர் காலத்திற்கு மட்டுமே உத்திரவாதம் உண்டு. இன்று இறையச்சம் என்பதே வெகுதூரப்பட்ட ஒன்றாகிவிட்டது . இளைய சமூகம் சீரழிய சிறு பிராயத்தில் சீரான விஷயங்கள் ஊட்டபடாததுதான் பெறும் காரணம் .

மறுமையில் விசாரணை உண்டு .

அல்லா கூறுகிறான்

நாளை மறுமையில் ஒவ்வொறு அருளுக்கும் விசாரனை உண்டு.

இறைவன் திருமறையில் குழந்தைகள் அருட்கொடை (நிஃமத் ) என கூறியுள்ளான் .

இவர்களை பற்றி விசாரணை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

இஸ்லாமியார்களாகிய நாம் நம் குழந்தைகளை இந்து - கிருஸ்துவ - மிஷினரிகளின் பள்ளியில் படிக்க அனுப்புகிறோம். வருடம் முழுவதும் அவர்களை சார்ந்த கொள்கைகளை பகிரங்கமாகவும் , சூசகமாகவும் நம் குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கிறார்கள். பல விஷயங்களை ஆதாரமாக நிருபிக்க முடியும் . நாம் செய்ய வேண்டியது நம்மோடு இருக்கும் இந்த விடுமுறை நாட்களில் அவர்களுடன் அன்போடு பேசி -பழகி குழந்தைகள் விளங்கியுள்ள தவறான இறை நம்பிக்கைகளை களைந்து அல்லாஹ்வை பற்றிய அச்சம் - நம்பிக்கையை நிறைவாக கொடுக்க வேண்டும்.

குறிபிட்ட தக்க விஷயம் யாதெனில் குழந்தைகளுடன் மணவிட்டு பேச வேண்டும் . எந்த சிந்தனயில் குழந்தை வளர்கிறது என்ற கூட தெரியாமல் இருப்பதென்பது பெரும் கை செததிற்குரிய விஷயம். யாரோ ஒருவரிடம் போனில் பேச நான் 2 நாள முயற்ச்சி பண்றேன் உங்களிடம் பேச என 2 நாட்கள் காத்திருக்கும் நாம் நம் குழந்தைகளுடன் பேசி - சிரிக்க நேரம் கொடுப்பதில்லை.

அதே போல குழந்தைகளுடன் அன்போடு அணுகவேண்டும் கூறினார்கள் நபி (ஸல் ) அவர்கள் ."யார் சிறுவர்கள் மீது அன்பு காட்டவில்லையோ , பெரியோர்களை மதிக்கவில்லையோ அவர் நம்மை சார்ந்தவர்கள் அல்ல "

                சிறந்த இல்லம் ஒரு நற்பண்புள்ள தாயின் மடியைப் போன்றதாகும். அதில் தான் வளரத் துவங்குகிறார்கள். குழந்தைகள் நற்பண்புகளுடன் வளரத் துவங்குவது தான் முதற்கட்டமாகும். ஆதற்காக விவேகமான வழிமுறைகளைக் கையாள்வது ஒரு முஸ்லிம் தனது குழந்தைகளிடம் பல வழிகளிலும் அன்பைத் தேட வேண்டும். அவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களது வயது, அறிவிற்கேற்ப அவர்களுடன் விளையாடி, சிரிப்பூட்டி மகிழ்விக்க வேண்டும்.

                நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரழி) அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், குஸைர் ஆகிய மூவரையும் அணி வகுக்கச் செய்து எவர் என்னிடம் முந்தி வருகிறாரோ அவருக்கு இன்னின்ன பொருள்கள் கிடைக்கும் என்று கூறுவார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஓடி வந்து அவர்களின் முதுகிலும், நெஞ்சிலும் விழுவார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவர்களை முத்தமிடுவார்கள். (அஹ்மது)

                ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். கிராமவாசிகள் சிலர் நபிகளாரைச் சந்திக்க வந்தார்கள் அவர்கள் நபிகளாரிடம் உங்களது குழந்தைகளை முத்தமிடுவார்கள்? எனக் கேட்டார்கள் ஆம் என கூறினார்கள். நாங்கள் எப்பொழுதும் குழந்தைகளை முத்தமிடுவதில்லை என அவர்கள் கூற அப்பொழுது நபி (ஸல்) கூறினார்கள். உங்களுடைய உள்ளத்திலிருந்து அல்லாஹ் இரக்கத்தை எடுத்துவிட்டான் நான் என்ன செய்ய? என்றார்கள். (புகாரி)

வெளியில் எவ்வளவு பெரிய நபராக இருப்பினும் வீட்டில் அன்போடும் -பரிவோடும் இருக்க வேண்டும் . என்பது தான் நபியின் வழிகாட்டல் . இதற்கு நேர்மாறாக விட்டிற்குள் நுழையும் பொது கலகலப்போடும் , ஆரவாரமாகவும் ,மகிழ்சிகரமாக ,சந்தோஷமாகவும் இருந்த நிலை சட்டென மாறி ஏதோ போலிஸ் வந்தது போலவும் அதற்கு மேல் அதிகாரி திடிரென நுழைந்தது போல நிசப்தமாக வெறுத்த முகங்களோடு இவர் எப்போது வெளியில் போவார் என அவர் வந்ததையே பிரியப்படாத ஆண்மக்களின் நிலையை பார்க்கிறோம்.

இந்நிலை மாறி குழந்தைகளுடன் உறவாடி உள்ளத்தில் உள்ளதை அறிந்து இந்த நாட்களில் நாம் அவர்களுக்கு இறையச்சம், இறைநம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் . இது முதலாவது கடமை.

(2) நல்ல அமல்கள் செய்யும் குழந்தைகளாக :

வருடத்தில் 10 மாதங்கள் குழந்தைகள் நம்மோடு இருப்பதே இல்லை. அதிக பட்சமாக இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளார்கள். இந்த நாட்களில் நாம் அவர்களுக்கு பழக்க வேண்டிய மற்றொரு பெரிய பொறுப்பு. நல்ல அமல்கள் செய்யும் குழந்தைகளாக உருவாக்கவேண்டும். இந்த விஷயத்தில் தாய்மார்கள் சற்று கவனம் எடுக்க வேண்டும். அவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை இது தான் "லீவுதானே விடுங்க தூங்கட்டும்",

லீவுலையாவது விளையாட விடுங்க " 10 மாதங்களில் உலக கல்வி படிக்க , லீவ் நாட்கள் விளையாட , தூங்க என்றால் நல்ல அமல்கள் செய்து பழக எப்பொழுது .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். " ஏழு வயது அடைந்தால் தொழும்படி ஏவுங்கள் , 10 வயது அடைந்தும் தொழவிட்டால் அடித்து தொழ வையுங்கள் "

உதாரணமாக ஒரு செடி இருக்கிறது அதை நாம் எப்படி வளைத்து விடுகிறோமோ அதே வடிவில் வளர்வதை பார்க்கிறோம், அதே செடி மரமானபின்னால் வளைக்க நினைத்தாள் வளையாது என்பது ஒரு புறம் இருக்க அது உடைந்து விடும் என்பது தான் நிதர்சனமான உண்மை .
தமிழில் ஒரு சொல் உண்டு "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது " ஆக பெருமானார் (ஸல் ) அவர்கள் வணக்க வழிபாடுகளின் பக்கம் குழந்தை பருவத்திலிருந்தே கவனம் செலுத்த சொல்லியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் .

விடுமுறை காலத்தில் குழந்தைகள் அதிகம் ஈடுபடுகின்ற விஷயம் வீடியோ கேம் விளையாடுவது இது உடல் ரீதியாக, சிந்தனை ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது சாதாராணமான உண்மை. வீடியோ கேம் விளையாடுவதில் கண் , முளை , உடல் சோர்வு இது போன்ற வெளிப்படையான பாகங்கள் இருக்க இன்று குழந்தைகள் அதிகம் விளையாடும் கேம் “ANGRY BIROS, PRINCE OF PERSIA” இவை இரண்டும்.

குழந்தைகளின் சிந்தனை ரீதியான குழப்பம் , சீர்கேட்டை ஏற்படுத்தும் விஷமிகளின் செயலும் முதலாவது விளையாட்டு பிறரை கீழே தள்ள வேண்டும் , அழிக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் மற்றொரு விளையாட்டு தான் உலக பிரசித்திபெற்றது ஒரு பெண்ணுக்காக கொலையும் செய்யலாம் என்ற உணர்வை ஏற்படுத்தும் ஒன்றாகும் . இதை குழந்தைகள் இதை அதிகமாக விளையாடுவதால் குழந்தைகளின் சிந்தனையில் அவர்களே அறியாத விதத்தில் ஒவ்வொரு குழந்தைகளின் அறிவுக்கேற்ப அது பதிவாகி நாளடைவில் செயல் பாட்டுக்குவரும். அதே போன்று தொலைகாட்சி என்றால் :சோட்ட பீம் " தான் இதில் என்ன உள்ளது என்று பெரியவர்களும் பார்ப்பதும் உண்டு. ஆனால் இது முழுக்க முழுக்க நாஸிஸ கொள்கையை திணிக்ககூடிய காட்சிகள் தான் கொண்டது .இது போன்ற எண்ணற்ற விஷயங்களை நாம் கூற முடியும்.விடுமுறை காலங்களில் குழந்தைகளின் ஈடுபாடும் அதை கண்டுகொள்ளாத பெற்றோர்களின் நிலையம் அதன் விளைவுகளும் .

           அல்லாஹ் கூறுகிறான் :
              
செல்வமும், ஆண் மகன்களும் உலகத்தின் அலங்காரம் என கூறும் இறைவன் அதைத் தொடர்ந்து என்றும் நிலையான நற்கருமங்கள் தாம் உம் இறைவனிடம் நற்கூலியால் மிகச் சிறந்ததாகும். ஆதரவு கொள்வதற்கு சிறந்தது நல்ல அமல்கள் தான், அதன் மூலம் தான் வெற்றி பெற முடியும் என கூறியுள்ளான்.
                திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் பெருமக்கள் செல்வத்தை நற்காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டும் அதே நேரம் நற்காரியங்கள், நல்ல அமல்கள் செய்யும் குழந்தைகள் தான் நம் ஈடேற்றத்திற்குரிய விஷயங்கள் என கூறியுள்ளார்கள்.

                விடுமுறை நாட்களான இதைக் குழந்தைகளுக்கு நல்ல அமல்கள் செய்ய பழக்க வேண்டும், ஆர்வப்படுத்த வேண்டும்.

                முதலில் தொழுகையின் காரியங்களில் கவனம் செலுத்தி உரிய நேரத்தில் அதை விசாரிக்க வேண்டும்.

                புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் சம்பவம் :

                ஓர் தாய் தன் குழந்தைக்கு பால் புகட்டிக் கொண்டு இருப்பாள், அந்நேரத்தில் அந்த வழியில் ஓர் டிப்-டாப்பாக, செல்வ நிலையில் உள்ள தோற்றத்தில் ஒருவர் கடந்து போவார் அதைக் கண்ட தாய் என் பிள்ளையும் இவரைப் போன்று ஆக வேண்டுமே என ஆசைப் படுகிறாள். அந்த குழந்தை பால் குடிப்பதை விட்டு-விட்டு இவரைப் போன்று ஆகுவதைவிட்டும் அல்லாஹ்வே என்னை பாதுகாப்பாயாக! என கூறும். சிறிது நேரம் கழிந்த பின் ஒரு நபரை மக்கள் விரட்டிக் கொண்டே, விபச்சாரியே கெட்டவளே போன்ற வார்த்தைகளை கொண்டு திட்டியவர்களாக பின்தொடர்வதை கண்ட தாய் இவளைப் போன்று என் பிள்ளை ஆகுவதைவிட்டும் இறைவா நீயே பாதுகாப்பாயாக.. என பிரார்த்திப்பாள். இதை செவியுற்ற குழந்தை "ஹஸ்புனல்லாஹி வ நிஃமல் வகீல்" என கூறியதாக இவளை போன்று என்னை ஆக்குவாயாக  நிச்சயமாக முதலாமவர் வெறும் சர்வாதிகாரன், மக்களை அடிமைத்தனம் படுத்தி சிரமங்கள் கொடுப்பவன். மக்கள் கடுமையாக இவனை திட்டுவார்கள் - பொறுந்திக் கொள்வோர் இல்லை. உண்மையில் இவன் பெரும் அநியாயக்காரன் தான்.

                ஆனால் இராண்டாமவர் தூய்மையானவள், நல்ல அமல் செய்யும் ஸாலிஹான பெண் - மக்களின் ஓர் தரப்பினரின் தவறான பார்வையால் இவளை தவறாக புரிந்து கொண்டார்கள் என கூறியது.

                வெளி தோற்றத்தை பார்த்து முடிவு செய்கிற நாம் அசலான - உண்மையான விஷயங்களை எதிர்கால விளைவுகளைப் பற்றியும், அதன் முடிவுகள் பற்றியும் யோசிப்பதே இல்லை.

                நம் குழந்தை டாக்டராக, ஓர் இன்ஜினியராக, ஓர் பட்டதாரியாக ஆக வேண்டும் என நினைக்கிற நாம் அந்த குழந்தை நல்ல ஸாலிஹான அமல்கள் செய்யும் குழந்தையாக உருவாக வேண்டும் என்று நினைப்பதே கிடையாது. பள்ளி - கல்லூரிகளுக்கு கவனமாக அனுப்புகிறோம், பள்ளிவாசல்  மதரஸாக்களுக்கு அனுப்புவது கிடையாது. மதரஸாக்கள் என்பது படிப்பு வராத, சேட்டை செய்கிறவர்களை கொண்டு போய் சேர்க்கும் இடமாக குழந்தைகளிடம் நீ ஒழுங்க படிக்காவிட்டால் மதரஸாவில் கொண்டு போய் விட்டுவிடுவேன் என பயமுறுத்தாட்டும் ஒரு விஷயமாக வைத்துள்ளோம். அங்கு தான் நல்ல அமல்கள் செய்யும் வழிமுறையும் - அமல்கள் செய்ய ஆர்வமும் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு நல்ல அமல் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.

                நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

                உங்களால் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் அவர்களின் பொறுப்பு பற்றி மறுமையில் விசாரணை செய்யப்படும். (புகாரி)

                அல்லாஹ் உலகில் வாழும் அனைவர்களையும் ஒவ்வொரு பொறுப்போடும் இணைத்துள்ளான். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மீதுள்ள பொறுப்புகள் மகத்தானதாகும்.

                ஓர் பெண் முயன்றால் அல்ல, அவளால் மட்டுமே தன் குழந்தையை நல்ல ஸாலிஹான அமல்கள் செய்யும் பிள்ளைகளாக உருவாக்க முடியும். வல்ல ரஹ்மான் நம் குழந்தைகளை நல்ல அமல்கள் செய்யும் குழந்தைகளாக ஆக்குவானாக! ஆமீன்.

                இது இரண்டாவது கடமையாகும்.

3.இஸ்லாம் தான் உயர்ந்தது .குர் ஆன் -சுன்னத் வழியில் தான் வெற்றியுள்ளது  என்ற உணர்வுள்ள குழந்தையாக
முன்றாவது ஒரு கடமை யாதனில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு உணர்வு வேண்டும் .இது இல்லவே இல்லையன கூறலாம் .காரணம் நாம் படிக்க வைக்கிற பள்ளிகளும் மாற்று போதனைகளும் திணிக்க படுகிறது .சூழ்நிலைகளூம் பிற மக்களின் உறவோடு ,கலாச்சாரம் அதை பற்றி பேசவே வேண்டாம் .இந்நிலையில் இது போன்ற விடுமுறை நாட்களில் மார்க்க உணர்வுகளை போதிக்க வேண்டும் .
சிறு பிள்ளையிலுருந்தே ஹலால் -ஹராம் உடைய உணர்வு ஏற்பட வேண்டும் .அப்பொழுது தான் வாழ்க்கை தூய்மையாகும் .சதகாவின் பொருள்கள் இரவில் வந்து விளையாடிக்கொண்டு இருந்த நபி {ஸல்} அவர்களின் பேரக்குழந்தை எடுத்து வாயில் வைத்துவிட பெருமானார் [ஸல்] அவர்கள் விரலை வாயில் விட்டு அதை பிடுங்கி வெளியில் எறிந்து விட்டு கூறினார்கள் .சதகாவின் பொருள் நபிக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஹராம் தடையாகும் என் கூறினார்கள் [புகாரி]
நம் வாழ்வின் பக்கம் வருவோம் .பாவம் சிறிய குழந்தை பச்ச பிள்ள என்ன தெரியும் என சமாதான வார்த்தைகளை கூறி ஓர் ஹராமை சரிக்கட்டிவிடுவோம் .இந்த உணவு உனக்கு ஹராம் என புரியாத வயதில் கூறினார்கள் என்றால் குழந்தை முதலிலே சீராக வேண்டூம் என்பதற்காக தான் .
மேலும் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற மார்க்கத்தில் தான் பிறக்கிறது .அதன் பெற்றோர்கள் அக்குழந்தையை யூதர்களாக ,கிறிஸ்தவர்களாக அல்லது நெருப்பை வணகுபவர்களாக மாற்றி விடுகிறார்கள் [புகாரி]
சங்கையானவர்கலே சற்று யோசிக்க வேண்டும் பெற்றோர்கள் தான் மாற்றுகிறார்கள் என கூறியது எவ்வளவு எதார்த்தமாக நாம் பார்கிறோம் .குழந்தைகளின் நலன் கருதுகிறோம் என ஒன்றும் அறியாத வயதில் நாம் சென்று பள்ளியில் சேர்த்து வருகிறோம் .படிப்பு நல்ல இருக்க என பார்க்கிற நாம் அந்த பள்ளியின் பிற விசயங்களை பார்ப்பதே கிடையாது .எந்த கலாச்சாரத்தை போதிக்கிற பள்ளி என்பதை நாம் பார்பதே கிடையாது .அதை பற்றி கவலையும் கிடையாது .கவலை என்ன ?சிந்தனையை இல்லை என்பது தான் உண்மை .
ஒரு பெண் பிள்ளையின் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் வெளியில் தெரியும் அளவிற்கு சீருடை என்றால் அப்பள்ளியின் மற்ற விசயங்களை பற்றி என்ன சொல்வது .
10 மாதம் இந்த சீர்கெட்ட ஆடையை பல ஆண்கள் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது பெற்றோர்கள் தானே ?
முழங்கால் மறைக்க பட வேண்டும் என்பது ஹராம் என்ற பாடத்தை யார் சொல்லித்தருவது ?எங்கு ?எப்படி?என்ற கேள்விகளுக்கு பதிலாக தான் நாம் இந்த கோடையை பயன்படுத்த கூறுகிறோம் .
இறுதியில் ஒன்று :
அல்லாஹ் த ஆல  நபிமார்களின் குடும்பத்தை பற்றி குர்ஆனில் கூறிகிற பொழுது நூஹ் நபியின் மகன் ஈமானை ஏற்றுக்கொள்ளவில்லை .இறைவனே என் மகனை காப்பாற்றுவாயாக என கேட்டதற்கு
நூஹே!நிச்சயமாக அவன் உம் குடும்பத்தினரில் உள்ளவன் அல்ல .நிச்சயமாக அவன் ஒழுக்க மில்ல செயலுடையவன் .[11;46]
இதே போல இப்ராகிம் [அலை]அவர்களின் தந்தை ஆஜர் ஈமானை ஏற்றுக்கொள்ளவில்லை .அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தார்கள் .என்னுடைய தந்தையையும் நீ மன்னித்தருள்வாயாக !நிச்சயமாக அவர் வழி தவறிவிட்டவர்களில் ஒருவராக இருக்கிறார் என அல்லாஹ் பதில் அளித்துவிட்டான் .[26;86]
இங்கு ஈமானை இல்லாத நபருக்கு ஈமானை கேட்டார்கள் .ஹல்ரத் இப்ராகிம் [அலை]ஆனால் நூஹ் [அலை] அவர்களின் மகன் அவன் ஒழுக்கமற்றவானாக இருக்கிறான் .எனவே அவன்  உங்களின் குடும்பமே இல்லை என கூறிவிட்டான்.
இறையச்சம் ,இறை நம்பிக்கை  மார்கபற்றுள்ள குரான் -சுன்னத் வழிகாட்டலில் நடப்பது தான் குடும்பம் என விளங்க முடிகிறது .இவர்கள் இல்லாத போது எந்த உறவும் இல்லை என அல்லாஹ் கூறுகிறான் .எனவே தான் உங்களின் குடும்பத்தினரை நரக நெருப்பிலிருந்தும் பாதுகாத்து கொள்ளுங்கள் என கூறினான் .
வல்லான் நம் குழந்தைகளை எல்லா நல்ல நன்மைகளையும் கொண்டவர்களாக ஆக்கி வைப்பானாக ....
குடும்பத்தோடு மகிழ்ச்சிகரமாக சுவனத்தில் பிரவேசிக்க பாக்கியம் கொடுப்பானாக !ஆமீன் !வஸ்ஸலாம்

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்