Posts

Showing posts from 2017

صباح الخير

Image
           *💐 بِسْــــــمِ اللهِ  الرَّحْمَنِ  الرَّحِيْــــــــمِ 💐* 🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓 அஸ்ஸலாமு  அலைக்கும்  வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு அல்ஹம்துலில்லாஹ் !!!         என்  அருமை  சகோதர சகோதரிகளே இன்ஷாஅல்லாஹ் நாமும் இவைகளை கற்றுக் கொண்டு ,அமல்படுத்துவோம் ! மற்றவர்களுக்கும் எத்தி வைப்போம்! புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான்.                      🍇 தலைப்பு 🍒                     🌳🌳🌳🌳🌳🌳      இஸ்லாமிய வாழ்க்கை முறை     இஸ்லாம் மதமல்ல; அது ஒரு மார்க்கம் என்கிறோம். இதற்குக் காரணம், இஸ்லாம் சில தத்துவங்களின் தொகுப்போ, சில சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கச் சொல்லும் அமைப்போ அல்ல; மாறாக, அது ஒரு வாழ்க்கை நெறி; இருபத்து நான்கு மணிநேர வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஓர் உன்னதக் கோட்பாடு. நாளொன்றுக்கு ஐந்து வேளைகள் இறைவனைத் தொழுதுவிடுவதனால் மட்டும் ஒருவர் உண்மை முஸ்லிமாகிவிட முடி

தலைப்பு

ஓர்  அழகிய  கவிதை அற்புத வாழ்க்கை அப்பன் உயிர்துளி கொடுத்து.. அம்மை உயிரை சுமந்து.. தொப்புள் கொடி உயிர் வளர்ந்து.. பத்து மாதம் கருவறை இருட்டில் மூச்சுபயிற்சி கண்டு பூமியின் வெளிச்சத்தில் வந்து விழும் குழந்தை வித்தியாசமான உருவம் கொண்டு வேற்றுமையான எண்ணம் கொண்டு மனிதாபிமான குணம் கொண்டு ஆண்டவன் விருப்பபடி நிறம் கொண்டு வளர்ந்து வாழ்ந்து நல்லதும் கண்டு கெட்டதும் கண்டு சுகமும் கண்டு அவமானமும் கண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவம் கண்டு இது தான் உலகம் இது தான் வாழ்க்கை இது தான் பாதை இது தான் பயணம் என்று தெளிவதற்குள்ளே விதி சதி செய்து இயற்கை மாற்றம் கொண்டு உடலை வளர்த்து அறிவை வளர்த்து நட்பை வளர்த்து எதிர்ப்பை வளர்த்து கோழையை எதிர்த்து வீரத்தை வளர்த்து படிப்பு கண்டோம் தினமும் பிடித்த உணவு உண்டோம் வேலை கொண்டோம் உழைப்பு கொண்டோம் பணம் கண்டோம் திமிர் கொண்டோம் ஆணவம் கொண்டோம் அறியாமை கொண்டோம் ஏளனம் கொண்டோம்.. எளிமை துறந்தோம் பழைய நிலை மறந்து பணம் கண்டு புது வாழ்க்கை வாழ்ந்தோம் பணம் கண்டு பாசம் என்ற வேசம் கொண்டோம்..

சேலம்

Image
பார்க்க வேண்டிய இடம் இரம்யமான இயற்க்கை சூழல்....! பசுமை எனும் போர்வை போத்திய இடம்... இது தான் எங்க ஆத்தூரின் அடையாளமான பெரிய கல்வராயன் மலை....! கல்வராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி. பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது. கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்க பட்டுள்ளது. வடபகுதி 'சின்னக் கல்வராயன்' மற்றும் தென்பகுதி 'பெரிய கல்வராயன்' என்று குறிபிடபடுகின்றது. 'சின்னக் கல்வராயன்' மலைகள் சராசரியாக 2700 அடி உயரமும், 'பெரிய கல்வராயன்' மலைகள் சராசரியாக 4000 அடி உயரமும் கொண்டவை. சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டருக்கு அப்பால் கல்வராயன் மலைத்தொடர் ஆரம்பமாகிறது.... கள்வர் இனத்தவரின் பூர்விக வாழ்விடம் என்பதால் இம்மலை இப்பெயர் பெற்றது. இம்மலையின் தென்மேற்கு பகுதி #சேலம் மாவட்டத்தின் #ஆத்தூர் வட்டத்திலும் ... மேற்குப் பகுதி #விழ