இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்களை, மிக அழகிய முறையில்...
இந்தியப் பிரிவினை: இன்னொரு சாட்சியம் இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்களை, மிக அழகிய முறையில்... மவ்லானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய ''INDIA WINS FREEDOM''(இந்திய விடுதலை வெற்றி) நூலிலிருந்து சில பகுதிகள் நான் சொல்ல விரும்பிய வரலாற்றின் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டேன். 1947 ஆகஸ்ட்14-ம் தேதி பாகிஸ்தான் டொமினியனை (ஆட்சிப் பரப்பை) தொடங்கிவைப்பதற்காக லார்ட் மவுண்ட்பேட்டன் கராச்சிக்குச் சென்றார். மறுநாள் இந்தியாவுக்கு அவர் திரும்பி வந்தார். 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 12 மணிக்கு இந்திய டொமினியன் பிறந்தது. தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் விடுதலை வெற்றி உணர்ச்சிகளை மக்கள் முழுவதும் அனுபவித்து மகிழ்வதற்கு முன் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒரு மகத்தான சோக அனுபவம் தமக்குக் காத்திருந்ததை உணர்ந்தனர். நாம் நிம்மதியாக சுதந்திரத்தின் பயன்களை அனுபவிப்பதற்கு முன் தொல்லைகள் நிறைந்த காரியங்களை நீண்ட காலம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தோம். ஏன் ஒப்புக்கொண்டார்கள்? ஒரு விஷயம் இந்தக் கட்டத்தில் எழுவது இயல்பு. எல்லா இந்தியர்களின் மனதிலும் பிரிவினையானது கோப