பழங்களின் மருத்துவம் - பல வகைகள் கொண்ட வாழைப்பழத்தில் உள்ள மருத்துவப் பயன்


அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்!

இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு?

💟💜💖💚💚💛💛❤💙💙💟💜💖💚💛
பழங்களின் மருத்துவம் - பல வகைகள் கொண்ட வாழைப்பழத்தில் உள்ள மருத்துவப் பயன்
💙💛💚💖💜💟❤💙💚💚💖💜💜💟❤

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் இது.

வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன அவை:

பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னமும் பல வகைகள் இப்பழத்தில் உண்டு.

பொதுவாக எல்லா வாழைப்பழங்களிலும் வைட்டமின் ஏ, பி, பி2, சி உய்ர்சத்துக்களும், சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்துக்களும் நிரம்பியுள்ளன.

இப்பழத்திலுள்ள சத்துக்கள்

நீர் (ஈரப்பதம்)  - 66.4 கிராம்
நார்           - 0.4 கிராம்
கொழுப்பு          - 0.3 கிராம்
புரதம்           - 1.2 கிராம்
மாவுப்பொருள்  - 28.0 கிராம்
சக்தி (எனர்ஜி)  - 114.0 கலோரி
பாஸ்பரஸ்          - 36.0 மி;.லி
இரும்புச்சத்து  - 0.8 மி.கி
சுண்ணாம்புச் சத்து - 16.0 மி.கி
தையாமின்          - 0.05 யு.ஜி
கரோட்டின்           - 0.78 மி.கி
ரைபோஃபிளேவின் - 0.07 மி.கி
நியாசின்            - 0.5 மி.கி
வைட்டமின் ஏ    - 12.0 ஐ.கியு
வைட்டமின் பி1   - 0.5 மி.கி
வைட்டமின் பி2    - 0.08 மி.கி

எல்லா வகை பழங்களிலும் மனித உடல் ஆரோக்கியத்திற்கும், அவன் வளர்ச்சிக்கும் பெரும் உதவி செய்கிறது. எல்லா வாழைப் பழங்களும் மருத்துவப் பயன்கள் கொண்டவையே. இனி ஒவ்வொரு வகையான பழத்தின் மருத்துவப் பயன்களைக் காணலாம்.

பூவன் வாழைப்பழம்:

இப்பழம் நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியது
உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கக் கூடியது. இரத்த விருத்தியைத் தரும்.
தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக் கூடியது.
மலச்சிக்கலை அகற்றுவதில், மிகவும் அற்புதமாக பயன்படக் கூடிய இப்பழத்தினை தினம் இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பி;ட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
ஆஸ்துமாக்காரர்கள், அதிக கோழை கட்டிக்கொண்டவர்கள, குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரழிவு நோயாளர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
அடிக்கடி அஜீரணக் கோளாறா?

இவர்கள் தினமும் அதிகப்படியாக உணவு உண்பதை தவிர்த்து விட்டு தினமும் ஒரு வேளை மட்டுமே இப்பழத்தை இரண்டு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

வாழைப்பழத்தின் முழுப்பயனையும் பெற வேண்டுமானால் அதன் மேல் லேசாக கரும்புள்ளிகள் விழுந்தபின் வாங்கி சாப்பிடுவது நல்லது.

அதிக விலையுள்ள ரஸ்தாளி, மலை, செவ்வாரைப் பழத்தைவிட பூவன்பழம் குறைந்த விலைக்கு சத்துள்ள பழமாக கிடைக்கும் என்பதை மறவாதீர்.

ரஸ்தாளிப் பழம்:

உண்பதற்கு சுவையாக இருக்கும் இப்பழம் வாத உடம்புக்காரர்களுக்கு ஆகாது என்பார்கள்.
இதைச் சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று திம் மென்று ஆகிவிடும்.
பசியை மந்தப்படுத்தும் இப்பழத்தை அதிகமாக உண்ணாமல் இருப்பது நல்லது.
பலர் உணவு உண்டதும் ரஸ்தாளியை உண்பர். இது தவறு. உடனே சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
ஊட்டச்சத்து நிரம்பியதாக இருப்பினும் மந்தத்தை தரும்.
அளவுக்கு அதிகமாக மாவுச்சத்து இருப்பதால் நீரழிவுக்காரர்கள் இப்பழத்தை நினைக்காமலிருப்பது நல்லது.
வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த

நன்கு கனிந்த ரஸ்தாளியை ஒரு டம்ளர் நீரில் நன்றாக பிசைந்து, கரைத்துக் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடு;த்து வந்தால, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பச்சை வாழைப்பழம்:

பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.
பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள்.
நன்கு கனிந்த இப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். கனிந்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில் இப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக் கூடியது. ( அதாவது கால தாமதமாய் சாப்பிடலாம் என நினைத்தால் இப்பழம் விரைவில் அழுக்த் தொடங்கிவிடும்.)
இப்பழம் அதிக குளிர்ச்சி தரும் சுபாவம் கொண்டது
குறைந்த அளவே இப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
அதிக உஷ்ணக்காரர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.
காசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் தொடமலிருப்பது நல்லது.
மேற்கண்ட நோய்க்காரர்கள் குறைந்த அளவே சாப்பிட்டாலும் நோய்களை அதிகப்படுத்தும்.
பித்தத்தை இப்பழம் அதிகப்படுத்தும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மலச்சிக்கலை நீக்கும் குணம் கொண்டது.

மலை வாழைப்பழம்:

சற்று விலை அதிகமான பழம். சாமானிய மக்களுக்கு எட்டாத பழம்
வாத நோய்க்காரர்களை தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம்.
நல்ல ருசியும், அருமையான வாசனையும் கொண்ட பழம்.
இதிலே சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும்.
சற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது.
இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் அழகு பெறும்.
தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் ;சற்று கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.
பசினை மந்தப்படுத்தும் என்றாலும் நல்ல மலமிளக்கியாக உதவும்.
நல்ல ஜீரண சக்திக்கு பயன்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
அஜீரண கோளாறு நீங்க

ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையானாலும் சரி) சாப்பிட்டு வர கோளாறுகள் நீங்கும் சற்று பேதியாகும். பயப்பட வேண்டாம்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது.

பொதுவாக இரத்த சோகை கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.

பேயன் வாழைப்பழம்:

தமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம்
அதிக உஷ்ணமான தேகத்தை பேயன்பழம் மூலம் சமன்படுத்தலாம். அதாவது சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது பேயன்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச் சூட்டை தணிக்கும் இயல்பு கொண்டது
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
மலச்சிக்கலை நீக்கும்
தேகத்தில் அதிக குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை நாடுவது நல்லதல்ல. ஏனெனில் இது நுரையீரலில் கோழையை கட்ட வைத்து நுரையீரல் கோளாறுகளுக்கு தள்ளிவிடும். வாரத்திற்கு இரண்டோ மூன்றோ சாப்பிடலாம்.

கற்பூர வாழைப்பழம்

சிறிது அளவில் இருக்கும்
இனிப்புச் சுவை கொண்டது. நல்ல ருசியாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்கு பயன்படுகிறது.
தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது
தலைபாரம் நீங்கப் பயன்படும்.
இளைஞர்களுக்கு சுறுசுறுப்பை தரும் இனிய பழம்
கற்பூரத்தில் நெருப்பு பட்டவுடன் ஒளிவிட்டு பிரசாகிப்பதைப் போல, இப்பழத்தை சாப்பிட்டதும், தேகத்தில் உடனே ஒருவித தெம்பு ஏற்படுவதால்தான் அதற்கு இப்பெயர் ஏற்பட்டது போலும்.

நேந்திரன் வாழைப்பழம்:

கேரளத்தில் அபரிமிதமாக விளையும் பழம் இது. கோலையிலும் விளைவிக்கிறார்கள். நேந்திரன் சிப்ஸ் புகழ்பெற்றது.
மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்டது இப்பழம்.
நல்ல சத்துக்கள் நிரம்பியதாக இருக்கும்.
உடம்புக்கு குளிர்ச்சியை தருவது.
இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும்
வற்றல், சிப்ஸ், ஜாம் செய்து விற்கிறார்கள்.
உடல் மெலிந்தவர்களுக்கு                                                                                            நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும். அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.அடுப்பை மூட்டி இட்லி பானையை வைத்து இட்லி தட்டில். இட்லிவேக வைப்பதுபோல அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் நெய்யை கலந்து. 40 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்தவர்கள் திடகாத்திரத்துடன் சாண்டோ வாக திகழ்வார்கள்.
நேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகள சிதறாமல் பாதுகாப்பதாக ஆராய்ந்து தெரிந்துள்ளார்கள். இதனால் தான் கேரளியர் படிப்பில் சிறந்து விளங்குகிறார்களோ?
சிப்ஸ், ஜாம், வற்றல் சுவையாக இருக்கும் என்று அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும். எனவே பழமாக சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியம் பெறுங்கள்.

நவரை வாழைப்பழம்:

மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது
அதிகமாக எவரும் விரும்பாத பழம் இது. உடல் ஆரோக்கயத்திற்கு உதவாதது.
சொறி, சிரங்கு உள்ளவர்கள் சாப்பிடக் கூடாகு இதைச் சாப்பிட்டால் புண் அதிகமாகும்.
வாத நோய்க்காரர்களுக்க ஆகவே ஆகாது.
பசியை மந்தப்படுத்தி விடும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
நிறைய சாப்பிட்டால் சோம்பலை உருவாக்கம். அதாவது மந்தமாகவே இருக்கும்.

அடுக்க வாழைப்பழம்:

நவரைப் பழத்திற்குள்ள குணங்கள் அனைத்தும் இதற்கும் உண்டு.
இந்தப்பழத்திற்குள்ள நல்ல குணம், எந்த நோயும் இல்லாதவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் எந்த கெடுதியம் செய்யாது. அதாவது நல்லவனுக்கு நல்லவன் அவ்வளவுதான். எனவே நோயுள்ளவர்கள். இப்பழத்தை தொடபமல் இருப்பது நல்லது.

மொந்தன் வாழைப்பழம்:

இப்பழத்தை பொந்தன் வாழை என்றும் கூறுவார்.
சமையலுக்கு உபயோகப்படுத்தும் வாழைக்காயைப் பழுக்க வைத்த பின் எடுக்கும் பழத்தைத்தான் மொந்தன் பழம் என்ற கூறுவார்கள்.
கனிந்த பழம் சாப்பிட சுவையாக இருக்கும்.
மிதமாக அளவாகத்தான் இப்பழத்தை சாப்பிட வேண்டும்.
ஒரே நேரத்தில் மூன்று நான்கென்று உள்ளே தள்ளினால் பசியை மந்தப்படுத்தும்.
அளவாக தினம் ஒன்றோ இரண்டோ உணவுக்கு பின் சாப்பிட்டால் உஷ்ணத்தை தணிக்கும்.
வாந்தியை நிறுத்தும்.
காமாலை வியாதியை சுகப்படுத்தும் குணம் உண்டு.

கரு வாழைப்பழம்:

அதிகமாய் விற்பனைக்கு வராத பழம்
மலைப் பிரதேசங்களில் அதிகமாய் விளையும் பழம்
வாத நோய்க்காரர்களுக்கு ஆகாது
எவருக்கும் கெடுதல் தராது
உடலுக்கு ஊட்டத்தைத் தருதம் நல்ல பழம் இது.
குழந்தைகள் வளர்ச்சியை துரிதப்படுத்தும் இயல்பு கொண்டது. இப்பழம் கிடைத்தால் வாரத்திற்கு மும்முறை கொடுங்கள்.

செவ்வாழைப் பழம்:

வாழைப் பழங்களிலேயே அதிக அளவு சத்துக்கள் கொண்டது இப்பழம்
சிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருப்பது
கேரளாவில் அதிகம் விளையும் இப்பழம் சாப்பிட ருசியாகவும் இருக்கும்.
சற்று விலை அதிகமானது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட வேண்டிய நல்ல சத்துள்ள பழம்.
செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்ப ஆற்றல் பெருகும். தொற்றுநோய்கள் இவர்களிடம் தோற்று ஓடும்.

மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கல் வந்தாலே நமது உடலில் பலவித சிக்கல் வந்து விடுகிறது. கூடவே மனச் சிக்கலும் ஏற்பட்டு விடு;ம். மலச்சிக்கலை செவ்வாழை தீர்த்துவிடும்.

வாரத்திற்கு மூன்று நாட்கள் இரவில் ஆகாரத்திற்கு பின, பாலுடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீர்ந்துவிடும்.

மலடு நீங்க:

மலடு நீங்க ஆயிரக்கணக்கில் செலவு செய்கு தீராது. இதனால் கணவன்-மனைவிக்குள் தினச் சண்டைகள் குடும்ப வாழ்க்கையை குலைத்துவிடும். நெடுங்காலம் குழந்தையில்லாத ஆணும், பெண்ணும் செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும். கர்ப்பத் தொடர்பான சிறுதடைகள், நோய்கள் நீங்கி, பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

நரம்புத் தளர்ச்சி மனிதனை நடைப்pணமாக்கி விடும். நரம்புகள் நன்றாக இருந்தால் தான் நாம் எந்தச் செயலையும் நன்கு செய்ய முடியும். சுறுசுறுப்பாய் செயலாற்ற முடியும். நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்களில் நடுக்கமேற்படும். ஆண்களுக்கு ஆண்மை தன்மை இருக்காது. தாம்பத்ய வாழ்வில் சுகமிருக்காது. உற்சாகமில்லாத இவர்கள் உற்சாகம் கொள்ள உதவுவது செவ்வாழைப் பழமே!

தினமும் இரவு ஆகாரத்திற்கு பின் பாலுடன் செவ்வாழைப் பழத்தை முப்பது நாட்களுக்கு விடாமல் சாப்பிட்டு வந்தால் உடம்பில் புது இரத்தம் ஏறும். நரம்புகளுக்கு நல்ல வலு ஏறிஇ நரம்புத்தளர்ச்சி நீங்கிவிடும்.

செவ்வாழையிலுள்ள உயிர்சத்துக்கள் நரம்புத் தளர்ச்சிக்க ஊட்ட மருந்தாக செயல்படுகிறது.

மாலைக்கண்ணுக்கு:

பகலில் நன்றாக கண்கள் தெரியும். சூரியன் மறைந்தபின் சிலருக்கு கண் பார்வை மங்கலாகிக் கொண்டேயிருக்கும். இந்த நோய்க்கு மாலைக்கண் என்று கூறுவார்கள், வைட்டமின் ஏ சத்து குறைந்தால் கண் பார்வை மங்கும். செவ்வாழையில் ஏ சத்து மற்றும் நரம்புகளுக்க ஊட்டம் தரும் சத்துக்களும் மிகுதி.

எனவே மாலைக்கண் நோய் உள்ளவர்கள், தினமும் காலை ஆகாரத்திற்கு பின்னம், மாலையும் ஒவ்வொன்றென தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர, மாலைக்கண் நோய் நீங்கும்.

சிறுவர்களாய் இருப்பின் அரைப் பழமும் முதியவர்களாயிருப்பின் அரைப் பழமும் அவரவர் வயதிற்கும், ஜீரணத்திற்கும் தக்கபடி சாப்பிட்டு வாருங்கள்.

இன்னும் செவ்வாழைப்பழத்தால் பல பயன்கள் உள்ளன.
பல் சம்பந்தமான நோய்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போகும்.
இருதயம் பலப்படும்
பல்வேறு வகையான தொற்றுநோய்களை செவ்வாழை அண்ட விடாது.
பொதுவாக செவ்வாழைப்பழத்தை எல்லோரும், எல்லாக் காலத்திற்கும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.

வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றின் எந்தப் பழம், தங்கள் உடம்புக்கு ஏற்றது என்பதை அறிந்து உண்டு ஆரோக்கியத்தோடு வாழ்வீர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்

அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

Comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ அல்ஹம்துலில்லாஹ்!

    அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ அல்ஹம்துலில்லாஹ்!

    அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்