துஆக்களின் சிறப்புகள்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ
அல்ஹம்துலில்லாஹ்!
வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்.
இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்!
இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு?
💖💖💖💖💖💖💖💖
துஆக்களின் சிறப்புகள்
💖💖💖💖💖💖💖💖
ஷஃபான் மாதத்தில் அதிகமாக ஸலவாத்து சொல்லுதல்
ஷஃபான் மாதத்தில் அதிகமாக துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்!
நாம் இறைவனின் தியானத்தை தவிர வேறு எதிலும் மன அமைதி காண முடியாது .
அல்லாஹ்வை நினைவு கூர்வதை கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன
அல்லாஹ்வை உள்ளத்தாலும்,நாவினாலும்,தனித்தனியே தியானம் செய்யலாம் என்றாலும, உள்ளமும்,நாவும்,சேர்ந்து முழு மனதோடு கேட்கப்படும் துஆ தான் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படும்.
அல்லா கேட்டதையே கொடுக்கின்றான் . அல்லது அதைவிட
சிறந்ததை கொடுக்கின்றான். அல்லது அந்த துஆவைக் கொண்டு வர
இருக்கின்ற ஆபத்தை நீக்குகின்றான் என ரசூல்{ஸல்}அவர்கள் கூறினார்கள்.
நாம் துஆ செய்யும்போது இரு கைகளையும் தோல்,புஜம் வரை உயர்த்தி முகத்திற்கு நேராக வைக்க வேண்டும்.கிப்லாவை நோக்கி துஆ
செய்வது சிறந்தது.துஆ கேட்பதற்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.
பின் ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓத வேண்டும்.பின் மிகவும்
தாழ்மையுடனும்,அச்சத்தோடும் துஆ கேட்கவேண்டும் .
துஆ முடிந்த பிறகு மீண்டும் அல்லாஹ்வை புகழ்ந்து,பின்
ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓதி,ஆமீன் கூறி தம் இரு கைகளையும் முகத்தில் தடவி கொள்ளவேண்டும்.
அடியான் கையேந்தி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்ட பிறகு
அவனை வெறும் கையோடு அனுப்புவதற்கு அல்லா
வெட்கப்படுகிறான் என்று ரசூல்{ஸல்}கூறியுள்ளார்கள் .
சில நேரங்களில் செய்யப்படுகின்ற துஆ ஏற்று கொள்ளப்படுகின்றது .அவற்றில் சில கீழே எழுதப்பட்டு உள்ளன .மனதில் வைத்து கொள்ளவும்.
பாங்கிற்கும் , இகாமத்திற்கு இடையில் கேட்கப்படும் துஆ ,
பர்ளு தொழுகைக்குப்பின் கேட்கப்படும் துஆ
தஹஜ்ஜ்த் தொழுகைக்குப்பின் கேட்கப்படும் துஆ
சஜ்தாவில் கேட்கப்படும் துஆ
நோன்பு திறக்கும் முன் கேட்கப்படும் துஆ .
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ
அல்ஹம்துலில்லாஹ்!
அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!
All my dear friends pls post share me?
Insha Allah.
Comments
Post a Comment