தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! ஹதீஸ் துஆக்கள்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்!

இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு?

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்!
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
                    ஹதிஸ்  துஆக்கள்
🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ .

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

புகாரி: ஹதீஸ் எண்: 6306
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (1)
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

உச்சரிப்பு: ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்

பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். மேலும் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. மேலும் அல்லாஹ் மாபெரியவன்.

உச்சரிப்பு: ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்

பொருள்: அல்லாஹ்வைப் புகழ்வதோடு அவனைத் துதிக்கவும் செய்கிறேன். மகத்துவம் மிக்க அல்லாஹ் தூய்மையானவன்.

உச்சரிப்பு: லா இலாஹ இல்லல்லாஹு வலா நஅஃபுது இல்லா இய்யாஹ். லஹுன் நிஅஃமது வலஹுல் Fபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸன், லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்

பொருள்: அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஒருவனையே நாங்கள் வணங்குகிறோம். அருட்கொடைகள் தந்தவன் அவனே. கிருபையும் அவனுக்குரியதே. மேலும் அழகிய தொடர் புகழும் அவனுக்கே! அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. அவன் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவர்களாய் அவனை நாங்கள் வணங்குகிறோம்.

உச்சரிப்பு: லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் அதிகாரமும் இல்லை.

உச்சரிப்பு: ரப்பனா தகப்பல் மின்னா இன்ன(க்)க அன்(த்)தஸ் ஸமீஉல் அலீம் வ து(த்)ப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களிடம் இருந்து (இந்தப் பிரார்த்தனைகளை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறாய். மேலும் எங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ தான் பெரிதும் மன்னிப்பவனும் கருணை மிக்கவனும் ஆவாய்!

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (2)
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

உச்சரிப்பு: ரப்பனா லா துணுஸிஃக் குலூபனா பஃத இத் ஹதை(த்)தனா வ ஹப்லனா மி(ன்ல்)லதுன்(க்)க ரஹ்மதன், இன்னக அன்தல் வஹ்ஹாப்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பிறகு எங்களை வழிபிறழச் செய்து விடாதே! மேலும் உன்னருளில் இருந்து எங்களுக்கு கொடை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாக இருக்கிறாய்!

உச்சரிப்பு: ரப்பி ஹப்லீ மின்(ல்)லதுன்(க்)க துர்ரிய்யதன் தய்யிபதன் இன்னக ஸமீஉத் துஆ

பொருள்: என் இரட்சகனே! உன்னிடம் இருந்து எனக்கு தூய்மையான சந்ததிகளை வழங்குவாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்பவனாக இருக்கிறாய்!

உச்சரிப்பு: ரப்பனா ழலம்னா அன்Fபுஸனா வ இன் (ல்) லம் தஃக்Fபிர் லனா வ தர்ஹம்னா ல நகூனன்ன மினல் காஸிரீன்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் இழைத்துக் கொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டத்திற்குரியவர்களாகி விடுவோம்!

உச்சரிப்பு: ரப்பனஸ்ரிFப் அன்னா அதாப ஜஹன்னம இன்ன அதாபஹா கான ஃகராமா

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை விட்டும் நரக வேதனையை அகற்றிடு. நிச்சயமாக அதன் வேதனை ஓயாது தொல்லை தரக் கூடியது!

உச்சரிப்பு: ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வ துர்ரிய்யாத்தினா குர்ரத்த அஃயுனி(வ்) வஜ் அல்னா லில் முத்தகீன இமாமா

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியரையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம அஸ்லிஹ்லீ தீனியல்லதி ஹுவ இஸ்மது அம்ரி வ அஸ்லிஹ்லீ துன்யாயல்லத்தீ Fபீஹா மஆதீ வ அஸ்லிஹ் ஆகிரதியல்லத்தீ Fபீஹா மஆதீ வஜ்அலில் ஹயாத்த ஸியாதத(ன்ல்) லீ Fபீ குல்லி கைரின் வல் மௌத்த ராஹத(ன்ல்) லீ மின் குல்லி ஷர்

பொருள்: எனக்கு பாதுகாப்பாய் இருக்கும் என்னுடைய தீனை எனக்கு சீர்படுத்துவாயாக! எனது வாழ்வு எதில் இருக்கிறதோ அத்தகைய எனது உலகத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக! எங்கு நான் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதோ அந்த எனது மறுமையை எனக்கு சீர்படுத்துவாயாக! ஒவ் வொரு நன்மையையும் செய்வதற்கு (எனக்கு சாத்தியமாகும் வகையில்) என் வாழ்நாளை அதிகமாக்குவாயாக! மேலும் ஒவ்வொரு தீங்கிலிருந்தும் அமைதி அளிக்கக் கூடியதாக மரணத்தை ஆக்குவாயாக!

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (3)
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

உச்சரிப்பு: அஊது பில்லாஹி மின் ஜஹ்தில் பலாஇ வதர்கிஷ் ஷகாஇ வ ஸூஇல் களாயி வஷமாததில் அஃதா

பொருள்: கடுமையான துன்பத்தை விட்டும் துர்ப்பாக்கியம் அடைவதை விட்டும் விதியின் தீமையை விட்டும் எதிரிகளின் எக்காளத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹுஸ்னி வமினல் அஜ்ஸி வல் கஸ்லி வ மினல் ஜுப்னி வல் புخக்லி வமினல் மஃஸமி வல் மஃக்ரமி வமின் கஃலபதித் தைனி வ கஹ்ரிர் ரிஜால்

பொருள்: யா அல்லாஹ்! கவலை, இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், பாவம், கடன் மற்றும் கடன்களின் பாரம், பிற மனிதர்களின் கொடுமைகள் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அஊதுபிகல்லாஹும்ம மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுஸாமி வமின் ஸய்யியில் அஸ்காம்

பொருள்: வெங்குஷ்டம்,பைத்தியம், தொழு நோய், மற்றும் பிற கொடிய நோய்கள் அனைத்தை விட்டும்-யா அல்லாஹ் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்மஸ்துர் அவ்ராத்தீ வ ஆமின் ரவ்ஆத்தி வஹ்குபள்னீ மின் பைனி யதய்ய வ மின் خகல்Fபீ வஅன் யமீனி வஅன் ஷிமாலி வமின் Fபௌக்கீ வ அஊது பி அழ்மதி(க்)க மின் அன் உஃக்தால மின் தஹ்த்தீ

பொருள்: இறைவா என்னுடைய பலவீனங்களை மறைப்பாயாக. என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதி தருவாயாக. எனக்கு முன்பிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக. இன்னும் கீழே இருந்து எதிர்பாராத விதமாக கொல்லப்படுவதில் இருந்து -உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும் மஃக்Fபிர் கதீஅதீ வஜஹ்லீ வ இஸ்ராFபீ Fபீ அம்ரீ வமா அன்த அஃலமு பிஹி மின்னி அல்லாஹும் மஃக்கFபிர் லீ ஜத்தி வஹஸ்லீ வக(த்)தயீ வஅம்தீ வகுல்லு தாலிக இன்தீ

பொருள்: யா அல்லாஹ்! எனது பாவத்தையும் எனது அறியாமையையும் எனது விஷயத்தில் நான் மேற்கொள்ளும் வரம்பு மீறல்களையும் மற்றும் எந்தப் பிழைகளை என்னைவிட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் விரும்பி நாடி செய்த பிழைகளையும் விளையாட்டாகச் செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக! நான் தவறுதலாக செய்தவற்றையும், வேண்டுமென செய்தவற்றையும் மன்னிப்பாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும் மஃக்Fபிர் லீ மா கத்தம்(த்)து வமா அخக்கர்து வமா அஸ்ரர் (த்)து வமா அஃலன்து வமா அன்(த்)த அஃலமு பிஹி மின்னீ அன்தல் முகத்திம். வ அன்தல் முஅخக்கிர் வஅன்த அலா குல்லி ஷைஇன் கஸீர்

பொருள்: நான் முன்னர் செய்த பாவங் களையும் பின்னர் செய்த இரகசியமாய் செய்த- பகிரங்கமாய்ச் செய்த பாவங்களையும் மேலும் எந்தப் பிழைகளை என்னை விட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருள்களையும் உருவாக்கியவன் நீயே! மேலும் நீ அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாய்த் திகழ்கின்றாய்!

ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்