வீரப் பெண்மணி பேகம் ஹஜ்ரத் மஹல்

வீரப் பெண்மணி பேகம் ஹஜ்ரத் மஹல்

ஆங்கிலேயரை எதிர்த்து வீர சுதந்திரம் வேண்டி நின்ற வீரப் பெண்களின் வரலாற்றுப் பட்டியலை வரிசைப் படுத்தும்போது நிச்சயமாக பேகம் ஹஜ்ரத் மஹலுக்கு முக்கிய இடமுண்டு..

ஆண்களை தைரிய புருஷர்கள் என்று வர்ணிக்கும் வரலாறுகளுக்கும் சமூகத்துக்கும் மத்தியில் மனத்தெளிவுடன் கூடிய தைரியம் கொண்ட ஒரு முஸ்லிம் பெண்மணி அடக்கு முறைக்குப் பணியாமல் ஆசை வார்த்தைகளுக்கு உடன்படாமல் வாழ்ந்து காட்டினார் என்றால் அவர் பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகும்.

இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் புல்லரிக்க வைப்பதுடன் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இந்தப் பெண்மணியை நினைத்து இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம்களையும் தலை நிமிரவும் செய்கிறது. (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு பற்றிப் பார்க்கலாம்.

1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக இப்படி ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

ஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து நவாபுக்கு இரண்டாம் மனைவியாக அரண்மனைக்குள் புகுந்த பேகம், குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்க்கப் பெற்று , நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சாமர்த்தியத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் மிகவும் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்கள்.

கணவன் சிறையில் – ஏகாதிபத்திய சக்திகள் சுற்றிலும் சூழ்ந்து நின்ற வேளையில் ஆங்கில ஆட்சியின் தலைமையை எதிர்த்து துணிச்சலுடன் பேகம் ஹஜரத் மஹல் ஒரு பிரகடனத்தை விடுத்தார். அந்தப் பிரகடனத்தின் வாசகங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற ஒரு முஸ்லிம் பெண்மணியின் வீரத்தைக் குறிப்பிடுகிறது.

"To eat pigs and drink wine, to bite greased cartridges and to mix pig's fat with sweetmeats, to destroy Hindu;s temples and masjids of Muslims , on pretense of making roads, to build churches, to send clergymen into the streets to preach the Christian religion, to institute English schools, and pay people a monthly stipend for learning the English sciences, while the places of worship of Hindus and Muslims are to this day entirely neglected; with all this, how can people believe that religion will not be interfered with?" என்றார்.

ஒரு மாபெரும் ஆதிக்க சக்தியாக விரிவடைந்து கொண்டிருந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இப்படிப்பட்ட கடுமையான வாசகங்களைக் கொண்ட பிரகடனத்தை ஒரு சிறு குறு நிலத்தை ஆண்ட பேகம் ஹஜரத் மஹல் வெளிப்படையாக விடுத்தார் என்றால் அவரது தைரியத்தைப் புகழ வார்த்தைகளே இல்லை. அதனால்தான் Qurratulain Hyder என்கிற வரலாற்று ஆசிரியர் பேகத்தை இவ்விதம் புகழ்கிறார்.

“Begum Hazrat Mahal of Oudh was the last of the breed of able queens and generals. The queen led her kingdom's army into battle during the revolt of 1857. Even after she was defeated she defied Queen Victoria's famous Proclamation and issued a counter Proclamation”

மேலும் இளவரசர் அஞ்சும் குதர் என்பவர் ” பேகம் ஹஜரத் மஹல் ஒளத் சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட அரச வம்சத்தின் முகங்களில் வழிந்த கோழைத்தனத்தை துடைத்து எறிந்தவர் “ என்று கூறுகிறார்.

“She wiped out the blot of cowardice from the face of the ruling family of Avadh.” -Prince Anjum Quder

1857 - இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோவில் இருந்த பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.

பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலைமையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும் ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் கூட, பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34 வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையானவர்கள், ஒளத் பகுதியைச் சார்ந்த முஸ்லிம்களாவர்.

1858 மார்ச் 6 ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் பகதூர்ஷா அவர்களின் மகன்களின் தலைகளைக் கொய்து அவற்றை தட்டில் வைத்து பக்தூர்ஷாவுக்கு சிறையில் வைத்துக் கொடுத்த கொடியவனான மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான்.

ஆயினும், ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் சென்று தலைமறைவானார். (R.C. AgarWal, Constitution Develapment of India and National Movement).

பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சை உருக்கும் தியாகத்தின் சான்றுகளாகும்.

நேபாளத்துக்குள் தலை மறைவான பேகம் அந்நாட்டின் அன்றைய அரசர் ராணாவின் பிரதம மந்திரி ஜாங்க்க பகதூர் இடம் புகலிடம் கோரினார். ஆரம்பத்தில் ஆங்கிலேயருக்கு பயந்து அவருக்குப் புகலிடம் கூடத் தரப்படவில்லை. நாடு நகரங்கள் மற்றும் நவநிதியும் இழந்து நின்ற அரசிக்கு இறுதியில் நேபாளத்தில் புகலிடம் தரப் பட்டது.

இவர் தப்பிப் போகும்போது கொண்டு சென்ற செல்வம் யாவும் அவரைப் போல நாடு துறந்து பேகத்துடன் கூட வந்த அகதிகளின் செலவுக்கே ஆகிப் போனது. இதனால் வறுமை வாட்ட ஆரம்பித்தது. அன்றிலிருந்து பதினாறு வருடங்களுக்குப் பிறகு 1874–ல் காத்மாண்டுவில் வறுமையிலேயே உழன்று தனது வாழ்வை நீத்தார். எப்படிப்பட்ட வறுமை என்றால் அவரது மையத்தை அடக்கம் செய்யும் செலவுக்குக் கூட பணம் எதுவும் அவரிடம் மிச்சம் இருக்கவில்லை.

ஒரு சிற்றரசின் மகாராணி இப்படி சீரழியும் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது இந்த நாட்டுக்காக அவர் செய்த அளவிட முடியாத தியாகத்தின் அடிப்படையிலானது. முதல் சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயர்களால் மூன்று முறை சமாதானக் கொடி பிடிக்கப் பட்டு இருந்ததை ஏற்று அவர்களை எதிர்த்து ஓங்கிய வாளைக் கீழே போட்டிருந்தால் மீண்டும் அதே சாம்ராஜ்யத்தின் அரசியாகவே அவர் இருந்து இருப்பார். இப்படி நாட்டை விட்டு நாடோடியாக நாதியற்று மரணம் அடைந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.

பேகம் ஹஜரத் மஹலின் வரலாறு இப்படிப் பட்ட புகழ்மொழிகளால்தான் வரையப்பட்டுள்ளது.

A girl from a poor family,

she rose to the height of a Queen

and still higher to a place in history

where here selfless devotion to the cause of freedom,

her feminine courage, her patriotism,

her example of national pride shall ever remain resplendent with a hundred in aspiring themes.

Her memory too is entitled to the respect of the brave and the true hearted of all nations.

"Ifthikar- un- Nisha" was really the "Pride of All Woman"

தாய்நாட்டுக்கான சுதந்திரத்துக்காகப் போராடி அந்நிய மண்ணில் உயிர் துறந்த பேகம் ஹஜரத் மஹலுக்கு லக்னோவின் விக்டோரியா பூங்காவில் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சலவைக் கற்களால் ஆன நினைவுச்சின்னம் ஒன்று நிறுவப்பட்டது. இந்தப் பூங்கா இன்று பேகம் ஹஜரத் மஹல் பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதே நினைவுச் சின்னத்தில் ஒளத் இராஜவம்சத்தின் பாரம்பரிய கலாச்சார பிரதிபலிப்புகளை உள்ளடக்கிய பகுதியும் அழகுபடுத்தப் பட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.

அஜ்மல் M.J.

Comments

Post a Comment

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்